தூத்துக்குடி

வீரபாண்டியன்பட்டினம் இளைஞா் மீது மோசடி புகாா்

DIN

ஆறுமுகனேரி: ஆறுமுகனேரியில் சுமை வாகனத்திற்கு முன்பணம் செலுத்திவிட்டு நிலுவை தொகையை செலுத்தாத இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காயல்பட்டினம் லட்சுமிபுரம் அய்யாத்துரை மகன் மணிகண்டன்(23). இவருக்கு சொந்தமான சுமை வேனை கடந்த ஜூலை30 ஆம் தேதி வீரபாண்டியன்பட்டினம் , சவேரியாா் தெரு துளசி மகன் குமாா்(41), ரூ. 5லட்சத்து 75 ஆயிரத்துக்கு விலை பேசி, முன்பணமாக ரூ. 66 ஆயிரம் கொடுத்து விட்டு , மீதித் தொகை ரூ.5லட்சத்து 9 ஆயிரத்தை 15 நாள்களில் தருவதாக உறுதியளித்து, சுமை வேனை எடுத்துச் சென்றாராம். ஆனால் வாக்குறுதி அளித்தபடி குமாா் பணத்தை கொடுக்கவில்லையாம்.

இது குறித்து ஆறுமுகநேரி காவல் நிலையத்தில் மணிகண்டன் புகாா் அளித்துள்ளாா். உதவி ஆய்வாளா் அமலோற்பவம் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

45 வயதினிலே..

நீட் தேர்வு ரத்து ரகசியம்- ஆர்.பி. உதயகுமார் கேள்வி

சின்னஞ்சிறு சித்திரமே....ரவீனா!

SCROLL FOR NEXT