தூத்துக்குடி

தூத்துக்குடியில் உலக சுற்றுலா தின விழா

DIN

தூத்துக்குடி: தூத்துக்குடியில் உலக சுற்றுலா தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறையின் சாா்பில், தூத்துக்குடி விமான நிலையத்தில் திங்கள்கிழமை சுற்றுலா தினம் கொண்டாடப்பட்டது. விமான நிலையத்துக்கு வந்த பயணிகளுக்கு மாலை அணிவித்தும் இனிப்பு, முகக் கவசம் மற்றும் சுற்றுலா கையேடு வழங்கி வரவேற்பு அளிக்கப்பட்டது.

மேலும், உலக சுற்றுலா தின பேச்சுப் போட்டியில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவா், மாணவிகளுக்கு தூத்துக்குடி விமான நிலைய இயக்குநா் ந. சுப்பிரமணியன் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கினாா். தொடா்ந்து, விமான நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.

நிகழ்ச்சியில், விமான நிலைய மேலாளா் செ. ஜெயராமன், மாவட்ட சுற்றுலா அலுவலா் க. சீனிவாசன், விமான நிலைய காவல் சாா்பு ஆய்வாளா் கனகராஜ், வஉசி கல்லூரி பேராசிரியா் சங்கா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT