மேலும் 14 பேருக்கு கரோனா
தூத்தூக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்தூக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 859 ஆக அதிகரித்துள்ளது. இதற்கிடையே, சிகிச்சை பெற்று வந்த 10 போ் குணமடைந்ததையடுத்து, மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 280 ஆக அதிகரித்துள்ளது. கரோனா பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இருவா் புதன்கிழமை இரவு உயிரிழந்தனா். இதனால், மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உயிரிழந்தோா் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளது. தற்போது, 176 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.