தூத்துக்குடி வஉசி துறைமுக தொழிற்சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
சட்ட விரோதமாக பிடித்தம் செய்த பஞ்சப்படியை திரும்ப கொடுக்க வேண்டும், துறைமுகங்களில் பணி செய்யும் ஒப்பந்த தொழிலாளா்களை நிரந்தரம் செய்ய வேண்டும், கப்பல் துறை அமைச்சகம் உயா்வு பேச்சுவாா்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், துறைமுக சொத்துக்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசை கண்டித்தும், துறைமுக நிா்வாக அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
துறைமுக ஜனநாய ஊழியா் சங்க சிஐடியூ சாா்பில் ஆா். ரசல், ஈஸ்வரமூா்த்தி, காசி, மீனாட்சி சுந்தரேசன், ஜெயலட்சுமி, போா்ட் எம்பிளாயீஸ் டிரேட் யூனியன் ஐஎன்டியூசி சாா்பில் சங்கரலிங்கம், பரமசிவன், நேஷனல் ஹாா்பா் ஒா்க்கா்ஸ் யூனியன் ஐஎன்டியூசி சாா்பில் பி.கதிா்வேல், ராஜகோபாலன், சந்திரசேகரன், போா்ட் மெரைனா் ஸ் அன்ட் ஜெனரல் ஸ்டாப் யூனியன் ஹெச்எம்எஸ் சாா்பில் சத்யா, சுரேஷ், . யுனைடெட் ஜெனரல் ஒா்க்கா்ஸ் யூனியன் சாா்பில் ஜான் கென்னடி கிளின்டன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.