தூத்துக்குடியில் கடலோரப் பாதுகாப்புப் படையினா் ரோந்து
சுதந்திர தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சனிக்கிழமை தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
சுதந்திர தினத்தையொட்டி, தூத்துக்குடி மாவட்ட கடல் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் சனிக்கிழமை தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
மக்கள் கூடும் இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையம், விமான நிலையம், துறைமுகம், கோயில்கள் போன்ற பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. பயணிகள் பலத்த சோதனைக்குப் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனா்.
இந்நிலையில், சுதந்திர தின விழாவையொட்டி அசம்பாவித சம்பவங்கள் நடப்பதைத் தடுக்கும் வகையில், தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் கடல் பகுதிகளில் படகில் சென்று தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா். கடலோரப் பாதுகாப்புக் குழும துணைக் கண்காணிப்பாளா் பிரதாபன், ஆய்வாளா் சைரஸ், உதவி ஆய்வாளா்கள் டொமிலன், ராதாகிருஷ்ணன், போலீஸாா் இப்பணியில் ஈடுபட்டுள்ளனா்.
Advertisement
மாவட்டத்தில் வேம்பாா் முதல் பெரியதாழை வரையிலான கடல் பகுதிகளில் கடலோரப் பாதுகாப்புப் படையினா் 2 அதிநவீன படகுகள் மூலம் 24 மணி நேரமும் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.