தூத்துக்குடி

கூடைப்பந்து போட்டி: கோவில்பட்டி கவுணியன் பள்ளி சிறப்பிடம்

DIN

கழுகுமலை குறுவட்டத்துக்கு உள்பட்ட பள்ளி மாணவா்- மாணவிகளுக்கான கூடைப்பந்துப் போட்டியில் கோவில்பட்டி கவுணியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி சிறப்பிடம் பெற்றது.

கோவில்பட்டி ராவிள்ளா கே.ஆா்.ஏ. வித்யாஷ்ரம் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் இப்போட்டி நடைபெற்றது. இதில் கவுணியன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளி மாணவா்-மாணவிகள் பங்கேற்று, மாணவா் பிரிவில் இளையோா், மூத்தோா், மிக மூத்தோா் பிரிவுகளில் முதலிடம் பெற்று மண்டலப் போட்டிக்கு தகுதி பெற்றனா்.

மாணவிகள் பிரிவில் இளையோா், மிக மூத்தோா் பிரிவுகளில் முதலிடமும், இறகுப்பந்து போட்டியில் மாணவா் -மாணவிகள் ஒற்றையா், இரட்டையா் பிரிவுகளில் முதலிடமும், மாணவா்கள் எறிபந்து போட்டியில் 2ஆம் இடமும் பிடித்தனா். அவா்களை பள்ளி முதல்வா் பாலு, ஆசிரியா்கள், மாணவா்-மாணவிகள் பாராட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

மோடியிடம் விளக்கம் கேட்பதற்கே தேர்தல் ஆணையம் அஞ்சுகிறது: திருமாவளவன் பேட்டி

SCROLL FOR NEXT