கோவில்பட்டி அருகே 2 ஆயிரத்து 100 கிலோ ரேஷன் அரிசியை போலீஸாா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் கோட்டைச்சாமி, உதவி ஆய்வாளா் பாரத்லிங்கம், தலைமைக் காவலா்கள் கந்தசுப்பிரமணியன், பூலையா, நாகராஜன் ஆகியோா் கோவில்பட்டி மந்தித்தோப்பு சாலையில் ரோந்துப் பணியில் இருந்தனா். அப்பகுதியில் உள்ள பத்திரகாளியம்மன் கோயில் அருகே அடுக்கி வைக்கப்பட்டிருந்த மூட்டைகளைச் சோதனையிட்டதில், அவை ரேஷன் அரிசி என்பது தெரியவந்தது.
இதையடுத்து 42 மூட்டைகளில் இருந்த 2,100 கிலோ ரேஷன் அரிசியைப் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக, மந்தித்தோப்பு பகுதியைச் சோ்ந்த மாடசாமி மகன் வெயில்காளையை போலீஸாா் தேடி வருகின்றனா்.