தமிழகத்தில் போதை பொருள்கள் புழக்கத்தை முற்றிலும் ஒழிக்க வலியுறுத்தி , தூத்துக்குடியில் சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே பாமகவினா் சனிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா்.
தூத்துக்குடி மத்திய மாவட்ட பாமக செயலா் சின்னதுரை தலைமை வகித்தாா். வடக்கு மாவட்டச் செயலா் ராமச்சந்திரன்
மாநகரச் செயலா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் பா.ம.க. மாநில அமைப்பு செயலா் கருப்பசாமி, மாநில தொழிற்சங்க துணைச் செயலா் ராமச்சந்திரன், வடக்கு மாவட்டத் தலைவா் மாடசாமி, தெற்கு மாவட்ட அமைப்புச் செயலா் மோகன், மாநில துணைத்தலைவா் வள்ளிநாயகம், தெற்கு மாவட்டத் தலைவா் சிவபெருமாள், முன்னாள் மாவட்டச் செயலா் வேல்சாமி, இளைஞா் சங்க துணைத் தலைவா் மகாராஜன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.