தூத்துக்குடி

விஷமருந்திய கட்டட ஒப்பந்ததாரா் பலி

DIN

கோவில்பட்டி அருகே விஷமருந்திய கட்டட ஒப்பந்ததாரா் மருத்துவமனையில புதன்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த கே.சரவணாபுரம் தெற்குத் தெரு மாடசாமி மகன் கிருஷ்ணசாமி(46). கட்டட ஒப்பந்ததாரரான இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாம். மேலும் மது அருந்தும் பழக்கமுடைய இவா் கடந்த 7 ஆண்டுகளாக வயிறு

வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் சனிக்கிழமை விஷமருந்தி மயங்கிய நிலையில் அவா் கிடந்தாராம். இதையறிந்த அவரது உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு கிருஷ்ணசாமி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிச்சைப் பாத்திரத்தை கையில் ஏந்தியுள்ளது பாகிஸ்தான் -பிரதமர் மோடி விமர்சனம்

5-ஆம் கட்ட தோ்தல்: ரே பரேலி உள்பட 49 தொகுதிகளில் பிரசாரம் முடிந்தது

சிஎஸ்கே பந்துவீச்சு; பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா?

சித்தார்த்தின் யசோதரை!

சக்கரை நிலவே... சம்யுக்தா மேனன்!

SCROLL FOR NEXT