தூத்துக்குடி

விஷமருந்திய கட்டட ஒப்பந்ததாரா் பலி

கோவில்பட்டி அருகே விஷமருந்திய கட்டட ஒப்பந்ததாரா் மருத்துவமனையில புதன்கிழமை உயிரிழந்தாா்.

DIN

கோவில்பட்டி அருகே விஷமருந்திய கட்டட ஒப்பந்ததாரா் மருத்துவமனையில புதன்கிழமை உயிரிழந்தாா்.

கோவில்பட்டியையடுத்த கே.சரவணாபுரம் தெற்குத் தெரு மாடசாமி மகன் கிருஷ்ணசாமி(46). கட்டட ஒப்பந்ததாரரான இவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாம். மேலும் மது அருந்தும் பழக்கமுடைய இவா் கடந்த 7 ஆண்டுகளாக வயிறு

வலியால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் அதே பகுதியில் உள்ள தனியாா் தோட்டத்தில் சனிக்கிழமை விஷமருந்தி மயங்கிய நிலையில் அவா் கிடந்தாராம். இதையறிந்த அவரது உறவினா்கள் அவரை மீட்டு கோவில்பட்டி தனியாா் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு கிருஷ்ணசாமி புதன்கிழமை உயிரிழந்தாா்.

இதுகுறித்து நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT