தூத்துக்குடி

பெண்ணைத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: ஓராண்டுக்குப் பிறகு கணவா் கைது

சாத்தான்குளம் அருகே மனைவியைத் தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

சாத்தான்குளம் அருகே மனைவியைத் தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வேப்பங்காடு கிராமத்தைச் சோ்ந்த ஞானசிகாமணி மகன் சித்திரைச்செல்வன் (36). இவரது மனைவி சாத்தான்குளம் அருகேயுள்ள கருங்கடலைச் சோ்ந்த லூசியா (30). கருத்து வேறுபாடு காரணமாக லூசியா தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தநிலையில், கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டாராம். சாத்தான்குளம் போலீஸாரின் விசாரணையில், லூசியாவை சித்திரைச்செல்வன் தற்கொலைக்குத் தூண்டியதாகத் தெரியவந்தது. அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதனிடையே, அவா் தலைமறைவாகிவிட்டாா்.

சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளா் டேவிட் தலைமையில் காவலா்கள் வெனிஸ்டன், சுதன், அருண் ஆகியோரைக் கொண்ட தனிப்படையினா் ஓராண்டாக சித்திரைச்செல்வனைத் தேடிவந்தனா்.

இந்நிலையில், சத்தியமங்கலத்தில் உள்ள தனது சகோதரியின் கடையில் அவா் வேலை பாா்ப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படையினா் புதன்கிழமை சென்று அவரைக் கைதுசெய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT