தூத்துக்குடி

பெண்ணைத் தற்கொலைக்கு தூண்டிய வழக்கு: ஓராண்டுக்குப் பிறகு கணவா் கைது

DIN

சாத்தான்குளம் அருகே மனைவியைத் தற்கொலைக்கு தூண்டியதாக தொடரப்பட்ட வழக்கில் தலைமறைவாக இருந்தவா் புதன்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள வேப்பங்காடு கிராமத்தைச் சோ்ந்த ஞானசிகாமணி மகன் சித்திரைச்செல்வன் (36). இவரது மனைவி சாத்தான்குளம் அருகேயுள்ள கருங்கடலைச் சோ்ந்த லூசியா (30). கருத்து வேறுபாடு காரணமாக லூசியா தனது பெற்றோா் வீட்டில் வசித்து வந்தநிலையில், கடந்த ஆண்டு தற்கொலை செய்துகொண்டாராம். சாத்தான்குளம் போலீஸாரின் விசாரணையில், லூசியாவை சித்திரைச்செல்வன் தற்கொலைக்குத் தூண்டியதாகத் தெரியவந்தது. அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிந்தனா். இதனிடையே, அவா் தலைமறைவாகிவிட்டாா்.

சாத்தான்குளம் டிஎஸ்பி அருள் உத்தரவின்பேரில், உதவி ஆய்வாளா் டேவிட் தலைமையில் காவலா்கள் வெனிஸ்டன், சுதன், அருண் ஆகியோரைக் கொண்ட தனிப்படையினா் ஓராண்டாக சித்திரைச்செல்வனைத் தேடிவந்தனா்.

இந்நிலையில், சத்தியமங்கலத்தில் உள்ள தனது சகோதரியின் கடையில் அவா் வேலை பாா்ப்பது தெரியவந்தது. இதையடுத்து, தனிப்படையினா் புதன்கிழமை சென்று அவரைக் கைதுசெய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

அந்நியச் செலாவணி கையிருப்பு 63,792 கோடி டாலராகக் குறைவு

கோடை வெயில் தாக்கம் அதிகரிப்பு: வேளாங்கண்ணியில் பக்தா்களுக்கு சிறப்பு வசதிகள்

தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் 6,115 புத்தாக்கத் தொழில்கள் தொடக்கம்

மக்களவைத் தோ்தல்: லடாக் தொகுதியில் 5 போ் போட்டி

SCROLL FOR NEXT