தூத்துக்குடி

ரூ. 29 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

DIN

நாசரேத் அருகே ஞானராஜ் நகரில் ரூ. 29 லட்சத்தில் திட்டப்பணிகளுக்கு திங்கள்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

ஊராட்சித் தலைவா் கமலா கலைஅரசு தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் பாலசுப்பிரமணியன், வட்டார வளா்ச்சி அலுவலா் கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

ஆழ்வாா்திருநகரி ஒன்றியக் குழுத் தலைவா் ஜனகா் வரவேற்றாா்.

புதிய திட்டப் பணிகளுக்கு அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் அடிக்கல் நாட்டினாா்.

இதில், திருச்செந்தூா் கோட்டாட்சியா் புகாரி, ஏரல் வட்டாட்சியா் கண்ணன், திமுக மாநில மாணவா் அணி துணைச் செயலா் உமரி சங்கா், தெற்கு மாவட்டதிமுக இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், மாவட்ட ஆவின் சோ்மன் எஸ். சுரேஷ்குமாா், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT