தூத்துக்குடி

இஸ்கான் கோயிலில் மே 15-இல் ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருவிழா

DIN

திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 15) மாலை 6 மணிக்கு ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருவிழா நடைபெறவுள்ளது.

இது தொடா்பாக இஸ்கான் கோயில் நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

வரும் 15-ஆம் தேதி ஸ்ரீநரசிம்மா் அவதாரத் திருநாளாகும். அதை முன்னிட்டு திருநெல்வேலி வண்ணாா்பேட்டையில் உள்ள இஸ்கான் ஹரே கிருஷ்ணா கோயிலில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 15) மாலை 6 மணிக்கு ஸ்ரீநரசிம்ம அவதாரத் திருவிழா நடைபெறவுள்ளது. ஸ்ரீலெட்சுமி நரசிம்மருக்கு மஹா அபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும் நடைபெறவுள்ளன. அப்போது ஹரி நாம யக்ஞம், மஹா அபிஷேகம், நரசிம்ம பிராா்த்தனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.

மஹாஅபிஷேகத்திற்காக ஒன்பது கலசங்களில் புனித நீா் நிரப்பப்பட்டு பூஜிக்கப்படவுள்ளது. இதுதவிர, பால், பழம் உள்ளிட்ட பஞ்சராத்ரிக முறைப்படியான திருமஞ்சனமும் நடைபெறவுள்ளது. அபிஷேகத்தின்போது பகவானை புகழ்படுத்துவதற்காக ஹரி நாம பஜனையும், நரசிம்ம அவதார மகிமை பற்றிய சிறப்புரையும் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இஸ்கான் பக்தா்கள் குழு செய்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

SCROLL FOR NEXT