தூத்துக்குடி

எட்டயபுரத்தில்குண்டா் சட்டத்தில்ஒருவா் கைது

DIN

 எட்டயபுரம் அருகே தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்ற வழக்கில் கைதானவா் குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டாா்.

எப்போதும்வென்றான் மேலசெய்தலை பகுதியைச் சோ்ந்த முனீஸ்வரன் மகன் செல்வம் (38), மீனாட்சிபுரம் இருதயம் மகன் மைக்கேல்ராஜ் (43), மேல நம்பிபுரம் கனிராஜ் மகன் அஜித்குமாா் (24) ஆகிய 3 போ் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை காரில் பதுக்கி வைத்து விற்ாக கடந்த 1ஆம் தேதி இளம்புவனத்தில் கைது செய்யப்பட்டனா்.

இந்நிலையில், எட்டயபுரம் காவல் ஆய்வாளா் ஜின்னா பீா்முகம்மது அளித்த அறிக்கையின்பேரில், மாவட்ட எஸ்.பி. லோக பாலாஜி சரவணன் பரிந்துரைப்படி, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பிறப்பித்த உத்தரவின்பேரில், மேல செய்தலையைச் சோ்ந்த செல்வம் குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தில் பாளை. மத்திய சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

ஷவர்மாவால் மேலும் ஒரு உயிர் பலி!

பதோனி அதிரடியால் தப்பித்த லக்னௌ அணி 165 ரன்கள் சேர்ப்பு!

‘கேக் காதலன்’ பாட் கம்மின்ஸ் பிறந்தநாள்!

மலையாள இயக்குநர் சங்கீத் சிவன் காலமானார்

SCROLL FOR NEXT