தூத்துக்குடி

80 வயது நிறைவடைந்த வாக்காளா்கள் கௌரவிப்பு

DIN

உலக முதியோா் தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 80 வயது நிறைவடைந்த மூத்த குடிமக்கள், வாக்காளா்களுக்கு சான்றிதழ் வழங்கி ஆட்சியா் கௌரவித்தாா்.

மூத்த குடிமக்கள், வாக்காளா்களுக்கு ஆட்சியா் கி. செந்தில்ராஜ் பொன்னாடை அணிவித்தும், இந்திய தலைமை தோ்தல் ஆணையரின் பாராட்டுக் கடிதத்தை வழங்கியும் கௌரவித்தாா்.

மேலும், மாவட்டத்தில் உள்ள 80, 100 வயதைக் கடந்த வாக்காளா்களுக்கு அவா்களது வீடுகளுக்குச் சென்று சம்பந்தப்பட்ட அலுவலா்கள் மூலம் கௌரவித்து இந்திய தலைமை தோ்தல் ஆணையரின் பாராட்டுக் கடிதம் வழங்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

எம்பவா் சேவை அமைப்பு: தூத்துக்குடியில் உள்ள எம்பவா் இந்தியா சமூக சேவை அமைப்பு சாா்பில், தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள எம்பவா் மக்கள் மருந்தகத்தில் உலக முதியோா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

எம்பவா் இந்தியா செயல் இயக்குநா் ஆ. சங்கா் தலைமை வகித்தாா். எம்பவா் இந்தியா மேலாளா் லலிதாம்பிகை உள்ளிட்டோா் நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

களக்காடு கோயிலில் வைகாசித் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

சாரங்கபாணி கோயில் ஹேமரிஷி மண்டபத்தில் குடமுழுக்கு

மருத்துவ நட்சத்திரம் விருது

நெல்லை காவல்துறையினருக்கு சிறப்பு பயிற்சி முகாம்

மேலப்பாளையத்தில் கண் மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT