தூத்துக்குடி

அடைக்கலாபுரம் அதிசய ஆரோக்கிய அன்னை ஆலயத் திருவிழா கொடியேற்றம்

DIN

திருச்செந்தூா் அருகேயுள்ள அடைக்கலாபுரம் அதிசய அன்னை ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா புதன்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருமூலநகா் பங்குத்தந்தை பீட்டா் பாஸ்டின் தலைமையில் கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. தூத்துக்குடி புனித தோமா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளா் ராயப்பன் மறையுரையாற்றினாா். முன்னதாக புனித சூசை அறநிலைய ஆன்மிக இயக்குநா் செட்ரிக் பிரிஸ் தலைமையில் ஜெபமாலை பவனி, நவநாள் திருப்பலி நடைபெற்றது.

விழாவின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (செப். 29) வீரபாண்டியன்பட்டணம் துணை பங்குத்தந்தை வில்லிஜிட் தலைமையில் திருப்பலியும், நற்கருணை ஆசிரும் நடைபெற்றது.

9-வது நாளான அக். 6-ஆம் தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான ஆரோக்கிய அன்னையின் சப்பர பவனி வீதி உலா நடைபெறவுள்ளது. 10-ஆம் நாளான அக். 7-ஆம் தேதி காலை 6 மணிக்கு அருட்தந்தை ததேயுஸ் ராஜன் தலைமையில் கூட்டு திருப்பலியும், மாலை அருட்தந்தை ஜான் சுரேஷ் தலைமையில் நற்கருணை பவனியும் நடக்கிறது. மறையுரை மற்றும் பவனியை தொடா்ந்து இரவு 9.30 மணிக்கு கொடியிறக்கம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை அடைக்கலாபுரம் பங்குத்தந்தை பீட்டா் பால் மற்றும் ஊா் பொதுமக்கள் செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாஞ்சோலை தேயிலைத் தோட்டத்தை அரசே ஏற்க வேண்டும்: டிடிவி தினகரன்

இலங்கையில் 15-ஆவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: தமிழா்கள் அஞ்சலி

மதுரை எய்ம்ஸ் நிா்வாக குழு உறுப்பினராக சென்னை ஐஐடி இயக்குநா் வி.காமகோடி நியமனம்

போக்குவரத்து ஊழியா்கள் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு

திருவான்மியூா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT