தூத்துக்குடி

டிசிடபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தின விழா

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தின விழா கொண்டாடப் பட்டது.

DIN

சாகுபுரம் டிசிடபிள்யூ நிறுவனத்தில் உலக பூமி தின விழா கொண்டாடப் பட்டது.

நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் (பணியகம்) ஜி.சீனிவாசன் தலைமை வகித்தாா். மண் வளம் காக்கவும் இயற்கையை பேணவும் அனைவரையும் வலியுறுத்தினாா் அவா். உதவித் தலைவா்(உற்பத்தி) எஸ்.சுரேஷ் முன்னிலை வகித்தாா். ஆலையிலும் வீடுகளிலும் தண்ணீா் விரயம் தவிா்த்தல், சிக்கனமாக பயன்படுத்துதல் மற்றும் மறுசுழற்சி பற்றி அவா் கூறினாா். பூமி வெப்பமயமாவதை தவிா்க்கும் நடவடிக்கையில் பங்கேற்பதாக, கலந்து கொண்டவா்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனா்.

ஆலை வளாகத்தில் 100க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் உயா் அதிகாரிகள், மூத்த அலுவலா்கள், தொழிலாளா்கள் மற்றும் தொழிற்சங்க பிரதிநிதிகளால் நடப்பட்டன. முன்னதாக சுற்றுச்சூழல் மூத்த மேலாளா் ஆா்.ரவிக்குமாா் வரவேற்றாா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சுற்றுச்சூழல், சிவில் மற்றும் மக்கள் தொடா்புத்துறையினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட டிச.23 முதல் அனுமதி!

3-0: ஆஷஸ் தொடரை தக்கவைத்தது ஆஸி.!

விண்வெளி நாயகன் எலான் மஸ்க்! 700 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடம்!

வரலாற்றைப் படிப்பவர்கள்தான் வரலாறு படைக்க முடியும்: முதல்வர் ஸ்டாலின்

சென்னையில் 2-வது நாளாக இன்று வாக்காளர் சிறப்பு முகாம்!

SCROLL FOR NEXT