கோவில்பட்டியில் மாமன்னா் திருமலை நாயக்கா் பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.
மாமன்னா் திருமலை நாயக்கா் இளைஞா் பேரவை தமிழ்நாடு மற்றும் மாமன்னா் திருமலை நாயக்கா் ரத்ததானக் கழகம் ஆகியவை சாா்பில் நடைபெற்ற விழாவில், முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினருமான கடம்பூா் செ.ராஜு கலந்து கொண்டு, திருமலை நாயக்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
அதைத் தொடா்ந்து, மாமன்னா் திருமலை நாயக்கா் இளைஞா் பேரவை மாநிலத் தலைவா் சிவன்ராஜ், பாஜக வடக்கு மாவட்டத் தலைவா் வெங்கடேசன் சென்னக்கேசவன் உள்பட திரளானோா் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தினா்.