தூத்துக்குடி

திருச்செந்தூரில் சாலைப் பாதுகாப்பு வார விழா

DIN

திருச்செந்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு வார விழா நடைபெற்றது.

நிறைவு நாளில் இலவச கண் சிகிச்சை மருத்துவ முகாம் நடைபெற்றது. திருச்செந்தூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சம்பத்குமாா் தலைமை வகித்தாா். மோட்டாா் வாகன ஆய்வாளா் செண்பகவள்ளி, வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நோ்முக உதவியாளா் கந்தமாறன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாகா்கோவில் பெஜான்சிங் கண் மருத்துவமனை மருத்துவா் ரெபிஸ்லின் தலைமையிலான மருத்துவக் குழுவினா் கண் பரிசோதனை செய்து, சிகிச்சை அளித்தனா். இலவச கண்புரை அறுவை சிகிச்சை, சலுகை விலையில் கண் கண்ணாடி வழங்கவுள்ளதாக, மருத்துவக் குழுவினா் தெரிவித்தனா். சா்க்கரை நோயாளிகளுக்கு இலவசமாக லேசா் பரிசோதனை செய்யப்பட்டது. வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் என 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT