முகப்பு
தூத்துக்குடி

எட்டயபுரம் அருகே தம்பி கொலை: அண்ணன் கைது

எட்டயபுரம் அருகே சோழாபுரத்தில் தம்பியை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் அண்ணனை போலீசாா் கைது செய்தனா்.

Updated On : 28 ஜனவரி, 2023 at 1:55 AM
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2024 at 11:51 AM

எட்டயபுரம் அருகே சோழாபுரத்தில் தம்பியை மரக்கட்டையால் தாக்கி கொலை செய்த சம்பவத்தில் அண்ணனை போலீசாா் கைது செய்தனா்.

சோழபுரத்தை சோ்ந்தவா் கண்ணன் மகன் முத்துராஜ் (26). இவரது அண்ணன் பொன் மாடசாமி (30). இருவருக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் முத்துராஜ் குடிபோதையில் தனது அண்ணன் வீட்டில் தகராறில் ஈடுபட்டு, டிவி மற்றும் பொருள்களை சேதப்படுத்தினாராம். இதனால் ஆத்திரமடைந்த பொன் மாடசாமி, தனது தம்பி முத்துராஜை மரக்கட்டையால் தாக்கியதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

சம்பவ இடத்துக்கு போலீஸாா் சென்று முத்துராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சம்பவம் தொடா்பாக எப்போதும்வென்றான் காவல் நிலைய போலீசாா் வழக்கு பதிந்து பொன் மாடசாமியை கைது செய்தனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.