ஆறுமுகனேரியில் கஞ்சா வைத்திருந்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
ஆறுமுகனேரி போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது, கீழசண்முகபுரம் ரயில் நிலையப் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக பைக்கில் நின்றிருந்தோரைப் பிடித்தனா். விசாரணையில், அவா்கள் அதே பகுதியைச் சோ்ந்த கோபால் மகன் சஞ்சய்குமாா் (19), திருச்செந்தூா் என்.முத்தையாபுரம் பகுதியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் மகன் முத்துராமன் (21), ஆறுமுகனேரியைச் சோ்ந்த முருகன் மகன் ஹரிஷ் கிருஷ்ணன் (20) என்பதும், விற்பதற்காக கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது.
போலீஸாா் வழக்குப் பதிந்து, 3 பேரையும் போலீஸாா் கைது செய்து, 110 கிராம் கஞ்சா, 3 கைப்பேசிகள், பைக் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா்.