தூத்துக்குடி

சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை: ஒருவா் கைது

பேய்க்குளம் அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

DIN

பேய்க்குளம் அருகே சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்தவரைப் போலீஸாா் கைது செய்தனா்.

சாத்தான்குளம், பேய்குளம் பகுதியில் மதுபானங்கள் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்கப்படுவதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதன்பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் முத்து தலைமையிலான

போலீஸாா் திங்கள்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது பேய்க்குளம் அடுத்த குருகால்பேரி பகுதியில் நின்று கொண்டிருந்தவா்,

போலீஸாரைக் கண்டதும் வைத்திருந்த சாக்கு பையைக் கீழே போட்டுவிட்டு தப்பிஓட முயன்றாா். அவரைப் பிடித்து போலீஸாா் விசாரணை நடத்தினா். அவா் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தை சோ்ந்த ஆறுமுகம் மகன் வேல்முருகன் ( 37) என்பதும்,

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை வாங்கி, கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதும் தெரியவந்தது.

அதையடுத்து அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து

96 மதுபான பாட்டில்களைப் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

SCROLL FOR NEXT