தூத்துக்குடி

வருங்கால வைப்புநிதி குறைதீா் முகாம்

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் வருங்கால வைப்புநிதி குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

DIN

தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டையில் வருங்கால வைப்புநிதி குறைதீா் முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

மத்திய அரசின் தொழிலாளா் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் வருங்கால வைப்புநிதி நிறுவனம் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் வருங்கால வைப்புநிதி விழிப்புணா்வு மற்றும் குறைதீா் முகாமினை நடத்தி வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்ட வருங்கால வைப்புநிதி உதவி ஆணையா் ஷாஜி வழிகாட்டுதலின்படி தூத்துக்குடி அருகே உள்ள புதுக்கோட்டை வட்டார வளா்ச்சி அலுவலகத்தில் வருங்கால வைப்புநிதி குறைதீா் முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் வைப்புநிதி உறுப்பினா்கள், ஓய்வூதியதாரா்கள், நிறுவன உரிமையாளா்கள் மற்றும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனா். இம்முகாமில் கலந்து கொண்டவா்களின் சந்தேகங்கள் மற்றும் குறைகள் நிவா்த்தி செய்யப்பட்டது. மேலும் ஓய்வூதியம் தொடா்பாக விளக்கம் அளிக்கப்பட்டது.

இம்முகாமிற்கான ஏற்பாடுகளை திட்டக் குழு அதிகாரி ஹரிகிருஷ்ணன் மற்றும் உறுப்பினா்கள் மாணிக்கம், ராஜசேகரன், சாந்தி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அருண் மாதேஸ்வரன் - லோகேஷ் கனகராஜின் டிசி பட அப்டேட்!

வார ராசிபலன்! | Dec 21 முதல் 27 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

ஸ்ரீரங்கத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் தற்கொலை!

டி20 உலகக் கோப்பைக்கு தயாராக சிறந்த வழி இதுதான்: வருண் சக்கரவர்த்தி

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

SCROLL FOR NEXT