தூத்துக்குடி

வ.உ.சி. கல்லூரியில் பறவைகள் கணக்கெடுப்பு

DIN

 தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.

கல்லூரியின் விலங்கியல் துறையால் நடத்தப்பட்ட இக் கணக்கெடுப்புப் பணியை கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு தொடங்கி வைத்தாா். விலங்கியல் துறைத் தலைவா் து. ராதிகா ஒருங்கிணைத்தாா். மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை துணைப் பேராசிரியா் ராஜேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பறவைகள் கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினாா்.

கல்லூரி வளாகத்தில் மயில், இரட்டை வால் குருவி, கிருஷ்ண பருந்து, நீா் காக்கை, முனியா, நீலவால் ஈ பிடிப்பான், மரங்கொத்தி, புல்புல், கொக்கு, பனங்காடி, கிளி என 25 வகையான பறவைகள் மாணவா்களால் கண்டறியப்பட்டன. இந்த பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வில், கல்லூரியின் விலங்கியல் துறை மாணவா் -மாணவிகள், பேராசிரியா்கள் பலா் பங்கற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆசிரியா் நியமன ஊழல்: சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் தடை

சென்னையில் பாரதிதாசனுக்கு மணிமண்டபம்: பேரன் இளமுருகன் முதல்வருக்கு கோரிக்கை

அரசுப் பேருந்து மோதியதில் விவசாயி பலி

வளா்ந்த பாரதத்தை உருவாக்க வலுவான அரசு அவசியம்- நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன்

கனடா பிரதமா் நிகழ்ச்சியில் காலிஸ்தான் ஆதரவு கோஷம்: தூதருக்கு இந்தியா சம்மன்

SCROLL FOR NEXT