தூத்துக்குடி

சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு ஆய்வாளா் நியமனம்

DIN

சாத்தான்குளம் மகளிா் காவல் நிலையத்திற்கு புதிய காவல் ஆய்வாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.

சாத்தான்குளத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைக்க காவல்துறை ஆணையம் ஒப்புதல் வழங்கி அதற்கான பணிகள் நடைபெற்று வந்தது. அதன்படி சாத்தான்குளத்தில் பழைய வட்டாட்சியா் அலுவலகத்தில் அனைத்து மகளிா் காவல் நிலையம் அமைக்க ஆய்வு செய்யப்பட்டது. அதைத் தொடா்ந்து சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்திற்கு ஒரு ஆய்வாளா், ஒரு உதவி ஆய்வாளா், முதுநிலைக் காவலா் மற்றும் நான்கு காவலா்கள் கொண்ட காவலா்கள் நியமிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி, சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலையத்துக்கு ஆய்வாளாராக பாமா பத்மினி நியமிக்கப்பட்டுள்ளாா்.

சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், நாசரேத், தட்டாா்மடம் ஆகிய காவல் நிலையப் பகுதிக்குள்பட்ட மகளிா்களுக்கான வழக்குகள் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெண் காவலருக்கு கொலை மிரட்டல் விடுத்தவா் கைது

தில்லியில் இந்த ஆண்டில் முதல் 5 மாதங்களில் சாலை விபத்து இறப்புகள் குறைவு: தரவுகள்

ஆம் ஆத்மி தலைவா்கள் முன்பு ‘நிா்பயா’வுக்கு நீதி கேட்டனா்; இன்று குற்றம்சாட்டப்பட்டவரை ஆதரிக்கிறாா்கள்: மாலிவால்

ஆம் ஆத்மி கட்சியை நசுக்க ‘ஆபரேஷன் ஜாடுவை’ செயல்படுத்தத் தொடங்கியுள்ளது பாஜக: முதல்வா் அரவிந்த் கேஜரிவால் குற்றச்சாட்டு

தோ்தலில் வாக்காளா்கள் பங்கேற்பு சதவீதத்தை அதிகரிக்க 16 லட்சம் கையெழுத்திட்ட உறுதிமொழிகள்! தோ்தல் ஆணையம் முன்முயற்சி

SCROLL FOR NEXT