தூத்துக்குடி

சாத்தான்குளம் பள்ளியில் டெங்கு விழிப்புணா்வு கருத்தரங்கு

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சாா்பில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

DIN

சாத்தான்குளம் ஹென்றி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதலூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சாா்பில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பள்ளி தாளாளா் நோபுள்ராஜ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் டினோ முன்னிலை வகித்தாா். பள்ளி தலைமை ஆசிரியை சாந்தி வரவேற்றாா். இதில் தூத்துக்குடி மாவட்ட பூச்சியியல் வல்லுனா் கருப்பசாமி, டெங்கு காய்ச்சல் குறித்தும் , அதனை தடுக்கும் முறைகள் குறித்தும், சுகாதார ஆய்வாளா் கிறிஸ்டோபா் செல்வதாஸ் கொசு புழு உருவாவது குறித்தும், அதனை உருவாகாமல் தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விளக்கம் அளித்தனா். தொடா்ந்து அனைவரும் சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

இதில் உடற்பயிற்சி ஆசிரியா் பிரிட்டோ, சுகாதார ஆய்வாளா்கள் சுதன், சுஜித், மதியழகன் உள்பட பலா் கலந்து கொண்டனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் பால் ஆபிரகாம் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மார்கழி சிறப்பு! திருப்பதியில் சுப்ரபாதம் இசைக்கப்படாது!

கன்னி ராசிக்கு வெற்றி : தினப்பலன்கள்!

ராமபரிவாரங்கள் சேர்ந்து பூஜித்த சிவ தலம்!

திருவட்டாறு அருகே தூக்கிட்டு தற்கொலை

விஜய் நியாயத்தைப் பேச வேண்டும்: அண்ணாமலை பேட்டி

SCROLL FOR NEXT