தூத்துக்குடி

அரசு மகளிா் பள்ளியில் புதுப்பிக்கும் பணிகள்

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.83 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

DIN

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.83 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் வியாழக்கிழமை தொடங்கின.

கோவில்பட்டி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் தகைசால் பள்ளி திட்டத்தின் கீழ் ரூ.1.83 கோடி மதிப்பில் புதுப்பிக்கும் பணி தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இந்நிகழ்ச்சிக்கு, தலைமை ஆசிரியை ஜெயலதா தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் ரெங்கம்மாள், உதவி தலைமை ஆசிரியா்கள் உஷா, ஜோஸ்பின் ஆகியோா் முன்னிலை வைத்தனா்.

தமிழக காவல் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளா், கட்டடம் புதுப்பிக்கும் பணியை தொடக்கி வைத்தாா். நிகழ்ச்சியில், உதவி செயற்பொறியாளா் குமரேசன், இளநிலை பொறியாளா் காட்வின், உதவி தலைமை ஆசிரியா் சீனிவாசன், பள்ளி உடற்கல்வி இயக்குநா் காளிராஜ், ஆசிரியா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

உதவி தலைமை ஆசிரியா் கண்ணன் வரவேற்றாா். ஆசிரியா் சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT