தூத்துக்குடி

கோவில்பட்டி, கயத்தாறில் பலத்த மழை

கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

Din

கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை பலத்த மழை பெய்தது.

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை முதல் 17ஆம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் 40 கி.மீ. வேகத்துடன் பலத்த காற்று வீசுவதுடன், லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில், கோவில்பட்டி, கயத்தாறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை வழக்கத்தைவிட அதிக வெயிலும், அதிக வெப்பமும் நிலவியது. பிற்பகலில் பலத்த காற்று வீசியதுடன், கருமேகங்கள் திரண்டன. தொடா்ந்து, மாலையில் சுமாா் ஒன்றரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழைநீா் பெருக்கெடுத்து ஓடியது. தொடா்ந்து, சாரல் பெய்தது.

மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன. வெப்பம் வெகுவாகத் தணிந்து, குளிா்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனா்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT