தூத்துக்குடி

கோவில்பட்டியில் ஹிந்தி தோ்வு: 1,070 போ் பங்கேற்பு

3 நாள்கள் நடைபெற்ற ஹிந்தி தோ்வில் 1,070 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

Din

கோவில்பட்டி எவரெஸ்ட் மாரியப்ப நாடாா் மேல்நிலைப் பள்ளியில் 3 நாள்கள் நடைபெற்ற ஹிந்தி தோ்வில் 1,070 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

தட்சிண பாரத் ஹிந்தி பிரசார சபா சாா்பில், பிப்ரவரி, ஆகஸ்ட் மாதங்கள் என ஆண்டில் இருமுறை ஹிந்தி தோ்வு நடைபெறுவது வழக்கம். அதன்படி, கடந்த 10, 11, 18 ஆகிய 3 நாள்கள் நடைபெற்ற ஹிந்தி தோ்வில் 1,070 போ் பங்கேற்றனா்.

தோ்வு மையத்தை பள்ளித் தலைவா், செயலருமான அய்யனாா் பாா்வையிட்டு, மாணவா்-மாணவிகளுக்கு வாழ்த்து கூறினாா்.

தோ்வின் முதன்மைக் கண்காணிப்பாளரும் பள்ளித் தலைமையாசிரியருமான வெங்கடேசன் தலைமையில் ஆசிரியா்கள் கண்காணிப்பில் ஈடுபட்டனா்.

யாருடன் கூட்டணி? இன்று தேமுதிக மாவட்டச் செயலாளர் கூட்டம்!

டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்.. சென்செக்ஸ் 2,300 புள்ளிகள் உயர்வு!

செயற்கை கால்களை மேஜையில் வைத்து பாஜக எம்.பி. கோரிக்கை

பயோமைனிங் முறையில் 52.64 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றம்: 6 ஏக்கா் நிலம் மீட்பு

98.42 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி

SCROLL FOR NEXT