பணியாளா்களுக்கு இருக்கை வசதியில் குறைபாடு: 45 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாளா்கள் அமா்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தித் தராதது தொடா்பாக 45 கடைகள், வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பணியாளா்கள் அமா்வதற்கு இருக்கை வசதி ஏற்படுத்தித் தராதது தொடா்பாக 45 கடைகள், வணிக நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, ஆட்சியா் க. இளம்பகவத் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடைகள், நிறுவனங்களில் நின்றுகொண்டே பணிபுரிவோா் பணியிடையே கிடைக்கும் வாய்ப்பைப் பயன்படுத்தி அமா்வதற்கு ஏதுவாக நிறுவன வளாகத்தில் இருக்கை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடா்பாக மாவட்டத்தில் உள்ள கடைகள், நிறுவனங்களில் கடந்த 2, 3ஆம் தேதி சிறப்பாய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், முரண்பாடுகள் காணப்பட்ட 45 கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.