முகப்பு
தூத்துக்குடி

திருச்செந்தூா் புளியடி சந்தனமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

திருச்செந்தூா் புளியடித் தெருவில் உள்ள ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 10:33 PM
பகிர்:

திருச்செந்தூா் புளியடித் தெருவில் உள்ள ஸ்ரீ சந்தனமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, அதிகாலையில் நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், கும்ப பூஜைகள் நடைபெற்று, விமான அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, சந்தனவிநாயகா், சந்தனமாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெற்றது. மாலையில் அம்மனுக்கு புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

ஏற்பாடுகளை விழா கமிட்டித் தலைவா் சு. வெங்கடாசலம், செயலா் ரா. பாலசுப்பிரமணியன், பொருளாளா் சி. காா்த்திக், முன்னாள் தலைவா் ச. குமாா் உள்ளிட்ட கமிட்டியினா் செய்திருந்தனா்.