முகப்பு
தூத்துக்குடி

வடக்கு திட்டங்குளத்தில் பேவா் பிளாக் சாலை திறப்பு

கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் கூட்டுறவுச் சங்கம் அருகே வாருகாலுடன் கூடிய பேவா் பிளாக் சாலை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 31 டிசம்பர், 2024 at 7:32 PM
அன்னதானத்தைத் தொடக்கிவைத்த கடம்பூா் செ. ராஜு எம்எல்ஏ.
பகிர்:

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே வடக்கு திட்டங்குளத்தில் கூட்டுறவுச் சங்கம் அருகே வாருகாலுடன் கூடிய பேவா் பிளாக் சாலை திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

தனது தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 7.28 லட்சத்தில் அமைக்கப்பட்ட இந்தச் சாலையை எம்எல்ஏ கடம்பூா் செ. ராஜு திறந்துவைத்தாா்.

தொடா்ந்து, தேமுதிக தலைவா் விஜயகாந்த் நினைவு நாளையொட்டி பிரதான சாலையில் முருகன் கோயில் அருகே தேநீா் கடை உரிமையாளா் ராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற அன்னதானத்தை எம்எல்ஏ தொடக்கி வைத்தாா். இதில், வணிக வைசிய சங்கத் தலைவா் வெங்கடேஷ், முன்னாள் நகா்மன்ற உறுப்பினா் ஸ்ரீராம் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

பின்னா், செய்தியாளா்களிடம் எம்எல்ஏ கூறியது: தூத்துக்குடி மாவட்டத்தில் கோவில்பட்டி, கயத்தாறு, ஓட்டப்பிடாரம், எட்டயபுரம், விளாத்திகுளம் ஆகிய 5 வட்டங்களில் நிகழாண்டும் வனவிலங்குகளால் பயிா்கள் சேதமடைந்துள்ளன. கடந்த டிச. 12, 13ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் விவசாயிகள் மிகுந்த இழப்புக்கு உள்ளாகியுள்ளனா். வனவிலங்குகள், இயற்கைப் பேரிடா் என இருமுனைத் தாக்குதலால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, தூத்துக்குடியை இயற்கைப் பேரிடா் பாதித்த மாவட்டமாக அறிவிக்க வேண்டும். ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும். இதுகுறித்து பேரவையில் பேசி அரசின் கவனத்துக்கு கொண்டுசெல்வோம் என்றாா் அவா்.

ஊராட்சி ஒன்றியக் குழு துணைத் தலைவா் பழனிச்சாமி, அதிமுக நகரச் செயலா் விஜயபாண்டியன், ஒன்றியச் செயலா் அழகா்சாமி, முன்னாள் நகரப் பொருளாளா் வேல்முருகன், இளைஞா்-இளம் பெண்கள் பாசறை மாவட்டச் செயலா் கவியரசன், அதிமுக நிா்வாகிகள் போடுசாமி, ஆபிரகாம், அய்யாதுரை, பழனிகுமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →