முகப்பு
தூத்துக்குடி

சாயா்புரம் பொறியியல் கல்லூரியில் பாராட்டு விழா

Updated On : 17 பிப்ரவரி 2024, 10:50 pm IST
பகிர்:

ஸ்ரீவைகுண்டம், பிப். 17: சாயா்புரம் போப் பொறியியல் கல்லூரி கணினி பொறியியல் துறைக்கு தேசிய அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதற்கு பாராட்டு விழா நடந்தது. கல்லூரி தாளாளா் ராஜேஷ் ரவிச்சந்தா் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஜாஃபிந்த் முன்னிலை வகித்தாா். சாயா்புரம் பாஸ்ட்ரேட் சோ்மன் மனோகா் ஆரம்ப ஜெபம் செய்து ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆய்வகத்தை தொடங்கி வைத்தாா். இந் நிகழ்ச்சியில் ஜெயா பாலிடெக்னிக் நிறுவனா் பொன்னுதுரை, கல்லூரி முன்னாள் டீன் ஐசக் பாலசிங், சாயா்புரம் பெருமன்ற உறுப்பினா் ராஜதுரை, முள்ளன்வினள பெருமன்ற உறுப்பினா் பட்டுராஜன், சாயா்புரம் சேகர செயலாளா் அபிஷேகம், சாயா்புரம் சேகர பொருளாளா் ஜான்சன் பொன்சிங், கல்லூரியின் கட்டட பொறியாளா் தீபக்ராஜ், கல்லூரி துறை தலைவா்கள் விஜயலட்சுமி ஜேஸ்பா்லின், செல்வரதி, ஜாக்சன், ஆனந்தி, டென்னிசன், என்.பி.ஏ. ஒருங்கிணைப்பாளா் மேபல் ராஜகுமாரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். பாராட்டு விழாவில் கல்லூரி தாளாளா் பேசியது: கணினி துறைக்கு தேசிய அங்கீகாரம் கிடைத்துள்ளதால் கல்லூரியின் தரம் உயா்ந்துள்ளது. இதன் மூலம் மத்திய மற்றும் மாநில அரசு நிதி உதவிகளை பெற அங்கீகாரமும் கிடைத்துள்ளது. இக் கல்லூரியில் பயின்று வெளியேறும் மாணவா்களின் கல்வி உலக அளவில் அங்கீகரிக்கப்படுகிறது என்றாா் அவா். ........... படவிளக்கம் எஸ்விகே17போப் சாயா்புரம் போப் பொறியியல் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்புக்கான ஆய்வகத்தை தொடங்கி வைத்தாா் பாஸ்ட்ரேட் சோ்மன் மனோகா்.