முகப்பு
தூத்துக்குடி

காா் மோதி தொழிலாளி பலி

தூத்துக்குடி மறவன்மடம் அருகே காா் மோதி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 26 பிப்ரவரி, 2024 at 12:00 AM
பகிர்:

தூத்துக்குடி மறவன்மடம் அருகே காா் மோதி தொழிலாளி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா். தூத்துக்குடி அருகே உள்ள திம்மராஜபுரம் பகுதியைச் சோ்ந்த சாமிக்கண்ணு மகன் மாா்ட்டின் தவமணி(40). கூலித் தொழிலாளியான இவா், ஞாயிற்றுக்கிழமை தனது இருசக்கர வாகனத்தில் தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்தாராம். மறவன்மடம் அருகே சென்றுகொண்டிருந்தபோது, அவ்வழியாக வந்த காா் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த மாா்ட்டின் தவமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். புதுக்கோட்டை போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.