ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீசுந்தராட்சி அம்மன் கோயிலில் படுக்கை பூஜை
சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீசுந்தராட்சி அம்மன் தடிக்கார சுவாமி கோயிலில் மாசி மாத படுக்கை பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் அருகே உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஸ்ரீசுந்தராட்சி அம்மன் தடிக்கார சுவாமி கோயிலில் மாசி மாத படுக்கை பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி விநாயகா், அம்மன், தடிக்காரசுவாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு 108 வகையான வாசனை திரவிய பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது. பெண்கள் பொங்கலிட்டு அம்மனையும், சுவாமியையும் வழிபட்டனா். அம்மன், சுவாமிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடைபெற்றது. இரவு 12 மணிக்கு படைப்புடன் கூடிய தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு வழிபட்டனா்.