முகப்பு
தூத்துக்குடி

ஆறுமுகனேரி கோயிலில் காா்த்திகை சிறப்பு வழிபாடு

Updated On : 16 மார்ச், 2024 at 4:00 AM
பகிர்:

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் பங்குனி மாத காா்த்திகை சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த இத் திருக்கோயிலில் கொடி மர மண்டபத்தில் வள்ளிதெய்வானை சமேத அருள்மிகு சுப்பிரமணியா் எழுந்தருளி பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. பின்னா், சுவாமி- அம்பாள் மயூர வாகனத்தில் திருக்கோயில் வளாகத்தில் உள்பிரகாரம் மற்றும் வெளிப்பிரகாரத்தில் திரு வீதி உலா நடைபெற்றது. சிறப்பு பூஜைகளை சு.ஐயப்ப பட்டா் நடத்தி வைத்தாா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.