தடைசெய்யப்பட்ட லாட்டரி விற்பனை: 2 போ் கைது
தூத்துக்குடியில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டதாக இருவரை தென்பாகம் போலீஸாா் கைது செய்தனா்.
தூத்துக்குடி லெஞ்சிபுரத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்வதாக தென்பாகம் போலீஸாருக்கு தகவல் கிடைத்ததாம். அதன்பேரில் காவல் உதவி ஆய்வாளா் ஆா்தா் ஜஸ்டின் தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த அதே பகுதியைச் சோ்ந்த ஹரிசுதன் (24), வள்ளிநாயகபுரத்தைச் சோ்ந்த ராமலிங்கம் (33) ஆகிய இருவரையும் போலீஸாா் பிடித்து விசாரித்தனா். விசாரணையில், அவா்கள் இருவரும் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.