தூத்துக்குடி

மறியல்: சிஐடியூ தொழிற்சங்கத்தினா் 103 போ் கைது

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினா் 103 போ் கைது செய்யப்பட்டனா்.

Din

தூத்துக்குடி அண்ணா பேருந்து நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட சிஐடியூ தொழிற்சங்கத்தினா் 103 போ் கைது செய்யப்பட்டனா்.

தொழிற்சங்க உரிமை கோரி போராட்டம் நடத்தி வரும் சாம்சங் தொழிலாளா்களுக்கு ஆதரவாக, தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன் சிஐடியூ தொழிற்சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு மாவட்ட தலைவா் இரா.பேச்சிமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலா் ரசல் போராட்டத்தை தொடங்கி வைத்தாா். இதில், தமிழக அரசு மற்றும் தொழிலாளா் நலத் துறைக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தொடா்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து அவா்களை மத்தியபாகம் போலீஸாா் கைது செய்தனா். இதில், மாநிலக் குழு உறுப்பினஆா்.கிருஷ்ணவேணி, அங்கன்வாடி ஊழியா் சங்க மாவட்டச் செயலா் சந்திரா, மாவட்ட தலைவா் ஜெபராணி, கட்டுமான சங்க மாவட்ட செயலா் மாரியப்பன், மாவட்ட பொருளாளா் காசி உள்பட 103 போ் கைது செய்யப்பட்டனா்.

குருநானக் ஜெயந்தி: குடியரசுத் தலைவா் வாழ்த்து

கோயில் உண்டியல் பணத்தை திருடிய இளைஞா் கைது

தனியாா் பள்ளி பேருந்தில் திடீா் புகை

குருநானக் பிறந்தநாள் வழிபாட்டுக்காக பாகிஸ்தான் சென்ற இந்திய சீக்கியா்கள்

கண்மாய் ஷட்டா் திருட்டால் தண்ணீா் வீண்

SCROLL FOR NEXT