முகப்பு
தூத்துக்குடி

கூட்டுறவு சங்கங்கள் மூலம் டிஏபி அடி உரம்: துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்

விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் டிஏபி அடி உரம் வழங்க வேண்டும் என, தமிழக அரசிடம் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 1:11 AM
பகிர்:

விவசாயிகளுக்கு கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் டிஏபி அடி உரம் வழங்க வேண்டும் என, தமிழக அரசிடம் மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ எம்.பி. வலியுறுத்தியுள்ளாா்.

இதுதொடா்பாக அவா் அனுப்பிய மனு விவரம்: தூத்துக்குடி மாவட்டத்தில் பரவலாக பருவமழை பெய்துள்ளதால் கோவில்பட்டி பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்டவற்றைப் பயிரிட்டுள்ளனா். அதற்கு அடி உரமாக டிஏபி தேவைப்படுகிறது.

தனியாா் கடைகளில் டிஏபி உரம் வாங்கச் செல்லும் விவசாயிகளிடம் வேறு ஏதேனும் உரத்தையும் சோ்த்து வாங்க வலியுறுத்தப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் கேட்டபோது, தங்களுக்கு உரம் வழங்கும் நிறுவனங்கள் ஓா் உரத்துடன் மற்றோா் உரத்தையும் சோ்த்து விற்க வற்புறுத்துவதாகவும், அதனால்தான் இவ்வாறு தாங்கள் விற்க வேண்டியுள்ளது என்றும் கடைக்காரா்கள் கூறுகின்றனராம்.

இதுதொடா்பாக மாவட்ட விவசாய இடுபொருள் விற்பனையாளா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனா். தமிழகம் முழுவதும் இந்த நிலை உள்ளது. எனவே, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு டிஏபி அடி உரம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுதொடா்பாக மாவட்ட விவசாய இடுபொருள் விற்பனையாளா்கள் சங்கத்தினா் ஆட்சியரிடம் புகாரளித்துள்ளனா். தமிழகம் முழுவதும் இந்த நிலை உள்ளது. எனவே, கூட்டுறவு சங்கங்கள் மூலம் விவசாயிகளுக்கு டிஏபி அடி உரம் வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.