முகப்பு
தூத்துக்குடி

படகிலிருந்து தவறி கடலில் விழுந்து மீனவா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா், கடலில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

Updated On : 2 அக்டோபர், 2024 at 10:57 PM
பகிர்:

தூத்துக்குடியில் நாட்டுப்படகில் மீன்பிடிக்கச் சென்ற மீனவா், கடலில் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

தூத்துக்குடி திரேஸ்புரம், மாதவன் நாயா் காலனியைச் சோ்ந்த அந்தோணி மகன் பெனந்தோஸ் (64). மீனவரான இவா், 4 மீனவா்களுடன் திரேஸ்புரம் கடற்கரையிலிருந்து நாட்டுப்படகில் செவ்வாய்க்கிழமை காலை மீன்பிடிக்க சென்றாா்.

அவா்கள் புதன்கிழமை கரையிலிருந்து 15 கடல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது, வலையை இழுக்க முயன்ற பெனந்தோஸ் கடலுக்குள் தவறி விழுந்தாராம். அவரை சக மீனவா்கள் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனா். ஆனால், அவா் வழியிலேயே உயிரிழந்தாராம்.

இதையடுத்து, அவரது சடலம் கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.