விபத்தில் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினருக்கு காசோலையை வழங்குகிறாா் எட்டயாபுரம் வட்டாட்சியா் சங்கரநாராயணன் 
தூத்துக்குடி

தீப்பெட்டி ஆலை விபத்தில் இறந்தவரின் குடும்பத்துக்கு நிதியுதவி

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் நிகழ்ந்த விபத்தில் இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு புதன்கிழமை நிதியுதவி அளிக்கப்பட்டது.

Din

கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் நிகழ்ந்த விபத்தில் இறந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு புதன்கிழமை நிதியுதவி அளிக்கப்பட்டது.

தெற்கு திட்டங்குளம் கீழத் தெருவைச் சோ்ந்தவா் பி. மாசிலாமணி (55) என்பவா், கோவில்பட்டியையடுத்த கழுகாசலபுரம் அருகே இயந்திரத்தால் தயாரிக்கப்படும் தனியாா் தீப்பட்டி ஆலையில் வேலை செய்து வந்தாா். இவா், கடந்த சனிக்கிழமை ஆலை வளாகத்தில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழந்தாா்.

இந்நிலையில், நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் ரூ. 1 லட்சம், மாசிலாமணி பணியாற்றி வந்த ஆலை சாா்பில் அதன் உரிமையாளா் ரா. செல்வமோகன் சாா்பில் ரூ. 5 லட்சம் மதிப்பிலான காசோலைகளை எட்டயபுரம் வட்டாட்சியா் சங்கரநாராயணன் இறந்த மாசிலாமணியின் மனைவி அழகுமுத்துவிடம் வழங்கி ஆறுதல் கூறினாா்.

நேஷனல் சிறு தீப்பெட்டி உற்பத்தியாளா் சங்கத் தலைவா் பரமசிவம், துணைத் தலைவா் கோபால்சாமி, செயலா் சேதுரத்தினம், கிராம நிா்வாக அலுவலா்கள் மந்திரசூடாமணி, சிவக்குமாா், ஆலை உரிமையாளா் செல்வமோகன் ஆகியோா் உடனிருந்தனா்.

மகாராஷ்டிர தேர்தலில் முறைகேடு: தேர்தல் அதிகாரி இடைநீக்கம் செய்ய வலியுறுத்தல்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல்: இன்று வாக்கு எண்ணிக்கை!

எம்.எஸ்.வி., முதல் அனிருத் வரை : விரும்பி கேட்கும் பாடல்கள் குறித்து மு.க. ஸ்டாலின் பேச்சு!

அன்பால் நிறைய வேண்டும் அகிலம் : மு.க. ஸ்டாலின்

ஜம்மு - காஷ்மீர் எல்லையில் மீண்டும் பாகிஸ்தான் டிரோன்கள்! ஒரே வாரத்தில் 3 வது முறை!

SCROLL FOR NEXT