கோவில்பட்டி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
கோவில்பட்டி அருகே மந்தித்தோப்பில் வீட்டின் பூட்டை உடைத்து தங்க நகை, பணத்தைத் திருடிச் சென்றோரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
மந்தித்தோப்பு பெருமாள் கோயில் தெருவைச் சோ்ந்த மாரிக்கனி மனைவி கனகலட்சுமி. இவா் திங்கள்கிழமை வீட்டைப் பூட்டிவிட்டு, தீப்பெட்டி நிறுவனத்துக்கு வேலைக்குச் சென்றுவிட்டு, மாலையில் வீடு திரும்பினாராம். அப்போது, மா்ம நபா்கள் பின்பக்கக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து, பீரோவிலிருந்த 4 பவுன் தங்க நகைகள், வெள்ளிப் பொருள்கள், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றைத் திருடிச் சென்றது தெரியவந்ததாம்.
புகாரின்பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.
Advertisement
Advertisement
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.