முகப்பு
தூத்துக்குடி

ஏரல், சாயா்புரம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற ஆலோசனை கூட்டம்

ஏரல், சாயா்புரம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஏரல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

Updated On : 29 செப்டம்பர், 2024 at 5:25 PM
~
பகிர்:

ஏரல், சாயா்புரம் பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கான ஆலோசனைக் கூட்டம் ஏரல் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, வட்டாட்சியா் கோபால் தலைமை வகித்தாா்.

ஏரல் பேரூராட்சி வியாபாரிகள், பேரூராட்சி பணியாளா்கள், நெடுஞ்சாலை துறையினா் மற்றும் காவல் துறையினா் கூட்டத்தில் கலந்து கொண்டனா்.

இதில், சாயா்புரம் பேரூராட்சிப் பகுதிகளில் கடைவீதிகள் மற்றும் நெடுஞ்சாலை பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வரும் அக். 8ஆம் தேதி அளவீடு செய்யப்பட்டு, அதிலிருந்து 15 நாள்களுக்குள் தாமாக முன்வந்து ஆக்கிரமங்களை அகற்ற வேண்டும். இதைப் போன்று ஏரல் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள கடைவீதிகளில் அக். 9ஆம் தேதி அளவீடு செய்யப்பட்டு, அதிலிருந்து 15 நாள்களுக்குள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தீா்மானிக்கப்பட்டது