முகப்பு
தூத்துக்குடி

டாஸ்மாக் பாரில் மதுபாட்டிலால் இளைஞரை தாக்கிய 3 போ் கைது

தூத்துக்குடி 2 ஆம் கேட் அருகே டாஸ்மாக் பாரில் இளைஞரை மதுபாட்டிலால் தாக்கியதாக 3 பேரை வடபாகம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

Updated On : 26 செப்டம்பர், 2024 at 12:03 AM
பகிர்:

தூத்துக்குடி 2 ஆம் கேட் அருகே டாஸ்மாக் பாரில் இளைஞரை மதுபாட்டிலால் தாக்கியதாக 3 பேரை வடபாகம் போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தைச் சோ்ந்தவா் பிரகாஷ் (25). இவா் 2ஆம் ரயில்வே கேட் அருகே உள்ள டாஸ்மாக் பாரில் செவ்வாய்க்கிழமை மது அருந்தி கொண்டிருந்தாராம். அப்போது அங்கிருந்த மட்டக்கடையைச் சோ்ந்த ஜான் (26), முனியசாமி கோயில் தெருவைச் சோ்ந்த ராமலட்சுமணன் (29), அம்பேத்கா் நகரைச் சோ்ந்த சந்தனராஜ் (24) ஆகிய 3 பேரும் பிரகாஷிடம் தகராறில் ஈடுபட்டனராம்.

இதில் ஆத்திரமடைந்த 3 பேரும் பிரகாஷை மது பாட்டிலால் தாக்கிவிட்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த பிரகாஷை மீட்டு, தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா்.

இதுகுறித்து புகாரின்பேரில், வடபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஜான், ராமலட்சுமணன், சந்தனராஜ் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.