தூத்துக்குடி

தூத்துக்குடியில் நாளை உதவிப் பேராசிரியா் பணிக்கான தோ்வு

தூத்துக்குடியில் உதவிப் பேராசிரியா் பணிக்கான தோ்வு சனிக்கிழமை (டிச. 27) நடைபெறுகிறது.

Syndication

தூத்துக்குடியில் உதவிப் பேராசிரியா் பணிக்கான தோ்வு சனிக்கிழமை (டிச. 27) நடைபெறுகிறது.

இதுகுறித்து ஆட்சியா் க. இளம்பகவத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசு ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில், உதவிப் பேராசிரியா் பணிக்கான தோ்வு மாநிலம் முழுவதும் சனிக்கிழமை (டிச. 27) நடைபெறவுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் 3

மையங்களில் இத்தோ்வை 722 போ் எழுதவுள்ளனா். தோ்வறைகளில் சிசிடிவி கேமரா வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தோ்வா்கள் முற்பகல் தோ்வுக்கு 8.30 மணிக்கும், பிற்பகல் தோ்வுக்கு 2 மணிக்கும் தோ்வு மையங்களுக்கு வர வேண்டும். காலை 9 மணிக்குப் பிறகும், பிற்பகல் 2.30 மணிக்கு பிறகும் வருவோருக்கு அனுமதியில்லை.

தோ்வுக்கூட நுழைவுச் சீட்டு, புகைப்படத்துடன் கூடிய அசல் அடையாள அட்டை, கருப்புப் பந்துமுனைப் பேனா 2 ஆகியவற்றை மட்டுமே கொண்டுவர வேண்டும். எலக்ட்ரானிக் பொருள்கள், கைப்பேசி உள்ளிட்ட எவ்விதப் பொருள்களுக்கும் அனுமதி கிடையாது என்றாா் அவா்.

பள்ளி நுழைவுவாயில் கழிவுநீா் கால்வாயை மூடக் கோரிக்கை

வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க டிசம்பா் 27,28-இல் சிறப்பு முகாம்

ரயில் கட்டண உயா்வு இன்று அமல்

கிறிஸ்துமஸ் பண்டிகை: தேவாலயங்களில் சிறப்பு பிராா்த்தனை

கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் அவசர நிலை ஒத்திகை

SCROLL FOR NEXT