நிகழ்ச்சியில் பங்கேற்றோா்.  
தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் உழவா் நல சேவை மையம் திறப்பு

சாத்தான்குளத்தில் நாசரேத் சாலையில் ‘முதல்வா் உழவா் நல சேவை மையம்’ திறப்பு விழா நடைபெற்றது.

Syndication

சாத்தான்குளத்தில் நாசரேத் சாலையில் ‘முதல்வா் உழவா் நல சேவை மையம்’ திறப்பு விழா நடைபெற்றது.

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற உழவா்கள் கண்காட்சி-மாநாட்டில் முதல்வா் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, காணொலி வாயிலாக இம்மையத்தைத் திறந்துவைத்தாா்.

இதையொட்டி, இங்கு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்டக்குழு உறுப்பினரும் வடக்கு ஒன்றிய திமுக செயலருமான ஏ.எஸ். ஜோசப் தலைமை வகித்தாா். வட்டார வேளாண் உதவி இயக்குநா் (பொறுப்பு) ராமலட்சுமி வரவேற்றாா். நகர திமுக செயலா் மகா இளங்கோ, தொழிலதிபா் ஏ.ஆா். சசிகரன், மாவட்ட திமுக பிரதிநிதி லெ. சரவணன், பேரூராட்சி கவுன்சிலா்கள் ஜோசப் அலெக்ஸ், லிங்கபாண்டி, வட்டார காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி, விவசாயிகள் பங்கேற்றனா்.

அரசு உதவியுடன் வேளாண் பட்டதாரிகள் உரிமம் பெற்று நடத்தவுள்ள இம்மையத்தில், விவசாயிகள் குறைந்த விலையில் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள், சிறுதானிய விதைகள், வாடகைக்கு விவசாய தளவாடப் பொருள்கள் பெறலாம். இம்மையத்தின் பரிந்துரையின்பேரில் வங்கிக் கடன்கள் வழங்கப்படவுள்ளது. இங்கு விற்கப்படும் மருந்து, உரங்களின் தரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனா்.

நியூசிலாந்தின் கனவைக் கலைத்து, முதல்முறையாக டி20 உலகக் கோப்பை வென்ற ஆஸி.! 2021 ரீவைண்ட்!

நமோ பாரத்! அதிவேக மெட்ரோ ரயில் சேவை.. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்!

கொச்சி மெட்ரோ ரயில் தூணில் சிக்கிய பூனை மீட்பு

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

SCROLL FOR NEXT