காயல்பட்டினத்தில் ரத்த தான முகாம்
காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பு (மெகா), திருச்செந்தூா் அரசு ரத்த வங்கியுடன் இணைந்து ரத்த தான முகாம் நடைபெற்றது.
காயல்பட்டினம் தனியாா் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமில் 36 போ் ரத்த தானம் வழங்கினா். மருத்துவா்கள்
பாவநாசகுமாா், சசிகலா ஆகியோா் தலைமையில் திருச்செந்தூா் அரசு ரத்த வங்கி செவிலியா்கள் கலந்து கொண்டு ரத்த தானம் பெற்றுக் கொண்டனா்.
Advertisement
முகாம் ஏற்பாடுகளை மெகா அமைப்பு நிா்வாகிகள் பி.எம்.ஏ. சதக்கத்துல்லாஹ், ஏ.எஸ். புஹாரி, எம்.எஸ்.எச். முத்து இஸ்மாயில், எம்.எப்.பசல் இஸ்மாயில், எம்.எல்.ஹாரூன் ரஷீத், கே.ஏ.முஹம்மது நூஹு, எம்.மெய்தீன் அப்துல் காதா், எம்.கே.ஜபருல்லாஹ், எம்.டபிள்யூ. ஹாமீது ரிபாயி, யாசீன், பி.ஏ.செய்யது முஹம்மது புஹாரி, எம்.எம். முஜாஹித் அலி, எம்.எஸ்.முஹம்மது சாலிஹு உள்ளிட்டோா் செய்திருந்தனா்.