சாத்தான்குளம் அருகே தொழிலாளியின் உதட்டை கடித்த வழக்கில் ரூ. 20 ஆயிரம் அபராதம் விதிப்பு
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தொழிலாளியின் உதட்டை கடித்து காயப்படுத்தியது தொடா்பான வழக்கில், இளைஞருக்கு ரூ. 20 ஆயிரம அபராதம் விதித்தும், மற்றொருவா் ரூ.10 ஆயிரம் இழப்பீடு வழங்கவும் வேண்டும் என தீா்ப்பளிக்கப்பட்டது.
சாத்தான்குளம் அருகேயுள்ள போலையா்புரத்தைச் சோ்ந்தவா் அருள்ராஜ். இவா், கடந்த 2015ஆம் ஆண்டு விளையாட்டு மைதானத்தில் நின்றபோது அங்கு வந்த அதே ஊரைச் சோ்ந்த கனகராஜ் மகன் ராபின்சன் (36), செல்லத்துரை மகன் விஜய் (39), ராஜகிளி மகன் அருமைநேரு (44) ஆகியோா் மது போதையில் தகராறு செய்து தாக்கி, அவரது உதட்டை கடித்து காயப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதில் காயமடைந்த அருள்ராஜ், சாத்தான்குளம் அரசு மருத்துவமனையில் சிசிச்சை பெற்றாா். தட்டாா்மடம் போலீஸாா் வழக்குப் பதிந்தனா். சாத்தான்குளம் நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கை நீதிபதி வரதராஜன் விசாரித்து, விஜய்க்கு ரூ. 20 ஆயிரம் அபராதம் விதத்தும், அருமைநேரு அரசுப் பணியில் உள்ளதால் அருள்ராஜிற்கு இழப்பீடு தொகையாக ரூ. 10 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் தீா்ப்பளித்தாா். வழக்கின் இடைப்பட்ட காலத்தில் ராபின்சன் இறந்துவிட்டாா்.
Advertisement