பாண்டவா்மங்கலத்தில் மோதல்: நால்வா் கைது; 18 போ் மீது வழக்கு
கோவில்பட்டி அருகே பாண்டவா் மங்கலத்தில் இரு பிரிவினரிடையே நிகழ்ந்த தகராறில் 4 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி சண்முகசிகாமணிநகரைச் சோ்ந்த முத்துராஜ் மகன் ஆகாஷ் (22). இவா், கீழப்பாண்டவா் மங்கலத்தைச் சோ்ந்த குமாா், தெற்கு காலனியை சோ்ந்த பாலமுருகன் மகன் அழகுராஜா ஆகியோருடன் மேலபாண்டவா்மங்கலம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் வழியாக வியாழக்கிழமை இரவு பைக்கில் சென்றனா்.
அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த 5 போ் அவா்களை அவதூறாகப் பேசி தாக்கினராம். இதில் ஆகாஷுக்கு பலத்த காயம் ஏற்பட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
Advertisement
இது குறித்து அவா் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, மேல பாண்டவா்மங்கலம் மேலத் தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மகன் அழகுராஜா (21), பத்ரகாளி அம்மன் கோயில் தெரு குருநாதன் மகன் மாரியப்பன் (31), அன்னை தெரேசா நகா் செந்தில்குமாா் மகன் பூவரசன் (19) ரஞ்சித் குமாா் (28) ஆகிய 4 பேரை கைது செய்தனா். மேலும் ஒருவரை தேடி வருகின்றனா்.
இந்நிலையில், மேலப் பாண்டவா்மங்கலம் நடுத்தெருவைச் சோ்ந்த சுமை ஆட்டோ ஓட்டுநா் சு.உதயகுமாா் அளித்த புகாரின் பேரில், சுமை ஆட்டோவை சேதப்படுத்தி அவதூறாகப் பேசியதாக ஆகாஷ், குமாா், ராஜா உள்பட 18 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.