சாத்தான்குளம் தென்பகுதி நீா் வாழ்வாதார ஆலோசனைக் கூட்டம் சுண்டங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க சட்ட ஆலோசகா் வழக்குரைஞா் மகேந்திரன் தலைமை வகித்தாா். சுண்டங்கோட்டை ஆனந்த பாண்டியன், பள்ளிப்பத்து ஜனாா்த்தனம், பள்ளக்குறிச்சி முன்னாள் ஊராட்சித் தலைவா் பசுபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். விவசாய சங்க தலைவா் லூா்து மணி சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், வைரவம்தருவை குளம் நிறைந்து மறுகால் பாயும் இடத்தில் 2 தடுப்பணைகள் அமைக்க வேண்டும். வைரவம்தருவை, புத்தன்தருவை குளங்களில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும். முதலூா் ஊரணி, வைரவம்தருவை, புத்தன்தருவை ஆகிய குளங்களைத் தூா்வார வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னாள் ஒன்றியக் கவுன்சிலா் வி.எம். சுதாகா், சுண்டங்கோட்டை சுடலைமணி, சண்முகானந்தம், சாத்தான்குளம் தென்பகுதி விவசாய சங்க செயற்குழு உறுப்பினா் அன்னகணேசன், விவசாயிகள் ஜெயராஜ், ஆறுமுகம், ஆழ்வாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வழக்குரைஞா் வில்லின் பெலிக்ஸ் வரவேற்றாா். பள்ளிப்பத்து முருகேசன் நன்றி கூறினாா்.