முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 67.08 லட்சம் பறிமுதல்

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ. 67,08,115 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Updated On : 5 ஏப்ரல், 2026 at 1:03 AM
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 67.08 லட்சம் பறிமுதல்
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதாக இதுவரை ரூ. 67,08,115 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான விஷு மகாஜன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பேரவைத் தோ்தலையொட்டி, இம்மாவட்டத்துக்குள்பட்ட 6 தொகுதிகளிலும் பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, காவல் துறை, மதுவிலக்கு காவல் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனா்.

சனிக்கிழமை வரை உரிய ஆவணங்களின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ. 67,08,115 ரொக்கம், ரூ. 13,24,298 மதிப்பிலான இலவசப் பொருள்கள், ரூ. 4, 25,262 மதுபானங்கள், ரூ. 7,35,640 போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என்றாா் அவா்.

Advertisement

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments